தரிசனத்திற்கு புதிய விதிகள் – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

9 இடங்களில் வெயில் சதம்..!மே 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனத்திற்கு அனுமதி என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 

கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

அந்த வரிசையில், மே 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை மிக முக்கிய பிரமுகர்கள் மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், விஐபி பிரேக் தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்களை மே 3ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை கொடுக்க வேண்டாம் எனவும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.மீறி கொடுத்தால் அந்த சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.