வழிந்தோடும் சாக்கடை..அரசு பள்ளி மாணவிகள் அவதி..!
சிதம்பரத்தில் அரசு பள்ளியின் மேல்நிலைப் பள்ளியில் வழிந்துடும் சாக்கடை நீர் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 350-க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பள்ளி வளாகத்திற்குள் செல்லும் நிலையில் அரசு சாக்கடை நீர் வழிந்து ஓடியது. இதனால் மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





