டெல்லி சலோ போராட்டம் தள்ளிவைப்பு..!
‘டெல்லி சலோ’ விவசாயிகள் பேரணி, தொடங்கிய உடனேயே காவலர்கள் குறுக்கிட்டு தடுத்ததால் நிறுத்தப்பட்டது. கண்ணீர் புகையால் விவசாயிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டதால், பேரணியை இன்று தொடரப் போவதில்லை என விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பந்தர் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி செல்ல விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




