திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை ஜோதிகா..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம் செய்தார். ஏழுமலையான் கோயிலில் அதிகாலை நடந்த சுப்ரபாத சேவையின் பொழுது நடிகை ஜோதிகா வழிபாடு செய்தார்.
அவருக்கு தேவஸ்தான அதிகாரிகளும் அர்ச்சகர்களும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தரிசனம் முடிந்து வெளியே வந்த நடிகை ஜோதிகாவுடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்பொழுது பக்தர் ஒருவர் நடிகை ஜோதிகாவிற்கு ஏழுமலையான் திருவுருவப்படத்தை பரிசாக அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





