ஈஷா யோகா மையத்தில் விசாரணைக்கு தடை..!
ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை எதிர்த்து ஈஷா சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதன் விசாரணையில், ராணுவத்தையோ, காவல்துறையையோ இதுபோன்ற ஸ்தாபனத்தில் அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் கண்டித்தனர். மேலும், ஈஷா மையத்தில் உள்ள நபர்களிடம் நீதித்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




