--- --:--:-- --

விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய முன்னாள் அமைச்சர்..!

8

விருதுநகர் அருகே விபத்தில் சிக்கியவரை மீட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதிமுகவின் 52வது துவக்க விழா பொதுக்கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது.

 

இது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பின்னர் கூட்டம் முடிந்து சிவகாசியில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது விருதுநகர் சென்று சிவகாசி சாலையில் ஒருவர் விபத்தில் சிக்கி சாலையை கடந்துள்ளார்.

 

இதனை பார்த்து ராஜேந்திர பாலாஜி தனது காரில் இருந்து இறங்கி அதன் மீது அதிமுகவை சேர்ந்த மருத்துவர் விஜய் என்பவர் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் வருகைக்கு அவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon