காரை தரதரவென இழுத்துச் சென்ற லாரி – சிசிடிவி காட்சி வெளியீடு..!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டூரில் முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் ஐந்து பேர் நல்வாய்ப்பாக தப்பினர்.
குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





