கிணறு தோண்டும் பணியில் மண் சரிவு..சம்பவ இடத்திலேயே தொழிலாளி பலி..!
கேரள மாநிலம் மலப்புரத்தில் கிணறு தோண்டும் போது மண் சரிவு ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். கோட்டை பகுதியில் கிணறு தோண்டும் பணியில் இருவர் ஈடுபட்டிருந்தனர். 25 அடியில் கிணறு தோண்டிய பொழுது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதில் இருவரும் சிக்கிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மேற்கொண்ட மீட்பு பணியில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





