--- --:--:-- --

வட உள் மாவட்டங்களில் காலையில் பனிமூட்டம்..!

2

மிழகத்தின் வட உள் மாவட்டங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் வளிமண்டலக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக இன்றும், நாளையும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வட உள் மாவட்டங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon