அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கை மீண்டும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை 15ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த பொழுது ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கலவரம் ஏற்பட்டு வன்முறை உருவானது.
இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் பெற சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக கடந்த 7-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கலவரத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
ஏடிஎம் ஷட்டரில் பாய்ந்த ஷாக்..!
கால் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை தர தரவென இழுத்துச் சென்று கத்தியால் குத்திய இளைஞர்..!
நானும் இறந்து விட்டேன் என விஜய் ஆண்டனியின் உருக்கமான வார்த்தைகள்..!
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி..!
சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம்..!