நாடு முழுவதும் மாநிலங்களவை தேர்தலில் இதுவரை நாற்பத்தி ஒரு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ராஜேஷ்குமார், பா.சிதம்பரம், சி. வி சண்முகம் உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்திர பிரதேசத்தில் 11 பேரும், பீகாரில் 5 பேரும், ஆந்திராவில் 4 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 11 மாநிலங்களில் ஒட்டுமொத்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கூடுதல் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், பிரபல ஊடகம் குழுமத்தலைவர் சுபாஷ் உள்ளிட்டோர் தேர்தலை சந்திக்க உள்ளனர்.
மேலும் செய்திகள் :
வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் பலி..!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு.. அண்ணாமலையின் திட்டம்..!
மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்
அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: பறந்த நோட்டீஸ்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது: திருமாவளவன்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு முக்கிய பொறுப்பு..!