பிரபல சமூக ஊடகமான பேஸ்புக்கில் வெறுப்பைத் தூண்டும் பதிவுகளின் எண்ணிக்கை ஏப்ரலில் 37.82 சதவீதம் அதிகரித்துள்ளதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் வெறுப்பு உணர்வை தூண்டும் பதிவுகளின் எண்ணிக்கை ஏப்ரலில் 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பதிவுகள் நீக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பதிவர்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது.