விஜய் டிவியின் முக்கிய தொடர்களில் ஒன்றான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது. தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
மாயன், மாறன் என மிர்ச்சி செந்தில் இரண்டு வேடங்களில் இந்த தொடரில் நடித்து வருகிறார். மாயன் – மாறன் இடையே மோதல் நடப்பது தான் சீரியலின் கதை என்றும் சொல்லலாம்.
நாம் இருவர் நமக்கு இருவர் 2 விரைவில் முடிய இருக்கும் நிலையில் இறுதி நாள் ஷூட்டிங்கில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அதில் நடிகை ரச்சிதாவும் கலந்துகொண்டிருக்கிறார். அவர் NINI 2 தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.