மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி பகுதியில் உள்ள கிராமத்தில் கடும் வறட்சி காரணமாக தங்கள் உயிரை பணயம் வைத்து ஆழமான கிணற்றில் இறங்கி பெண்கள் தண்ணீரை எடுத்து வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் அந்தப் பகுதியில் உள்ள மூன்று கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.