--- --:--:-- --

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு..!

4

விளையாட்டு மைதானத்தில் ஐஏஎஸ் அதிகாரி நாயுடன் நடை பயிற்சி சென்றது சர்ச்சையான நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானமும் இரவு 10 மணிவரை திறந்திருக்கும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அனைத்து விளையாட்டுகளும் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் சில அரங்குகள் முன்கூட்டியே மூடப்படுவதாக புகார் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon