கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. யோகேஸ்வரன் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவரும் பொள்ளாச்சி உடுமலை சாலையை கடக்க முயன்றனர்.
அப்பொழுது திடீரென அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் யோகேஸ்வரனும், ராஜசேகரும் தூக்கி வீசப்பட்டதில் சாலையோரத்தில் விழுந்தனர்.
படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்தவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
கோவையில் வெல்வது யார்? அண்ணாமலைக்கு அதிர்ஷ்டம் உண்டா? ராஜ்குமாருக்கு ராஜயோகம் கூடுமா?
முதலையை அடித்து விட்டு உயிர் தப்பிய இளைஞர்..!
காட்டு யானையை கண்டு அச்சமடைந்த கிராம மக்கள்..!
கோவை மாநகராட்சி மண்டல தலைவர் வீட்டில் சோதனை..!
நாட்டில் விரைவில் வீசும் புயலில் மோடி அடித்துச் செல்லப்படுவார் - ராகுல் காந்தி
பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!