தண்ணீரில் மறைந்து தப்பிக்க முயன்ற 15 அடி நீள மலைப்பாம்பு ..!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தண்ணீரில் மறைந்து தப்பிக்க முயன்ற 15 அடி நீள மலைப்பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது.
உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள ஓரிடத்தில் மலைப்பாம்பு நடமாட்டம் குறித்து கேரள வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஓடைப் பகுதி தண்ணீருக்குள் மறைந்து தப்பிக்க முயன்ற மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.






