--- --:--:-- --

பேத்தியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த முதியவர்..!

3

ள்ளக்குறிச்சியில் பேத்தியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த முதியவர் மீது தொடரப்பட்ட வழக்கில் கையூட்டு வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட இரு பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் தனது சொந்த பேத்தியை கர்ப்பமாக்கி இந்திராணி மற்றும் ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி ஆகியோர் உதவியுடன் பேத்திக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.

 

அதோடு பேத்திக்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தையை பெண் தென்பெண்ணை ஆற்றில் புதைத்த நிலையில் புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

 

இந்த நிலையில் செவிலியர் ராஜாமணி 23 ஆயிரத்து 500 ரூபாய் கையூட்டு வாங்கிய மகளிர் காவல் நிலைய பெண் போலீசார் இருவர் வழக்கு பதிவு செய்தனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தகவல் அளித்தார்.

 

இதன் அடிப்படையில் தலைமை காவலர் மற்றும் முதல் நிலை காவலர் கோகிலா ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon