கருவுற்ற நிறைமாத பெண்ணை காலால் தாக்கிய இருவர் கைது..!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டியலின சமூகத்தை சேர்ந்த நிறைமாத கருவுற்ற பெண்ணை தாக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். இலைக்கறி விடுதியை சேர்ந்த பட்டியல் சமூகத்தில் கருவுற்ற பெண் கடந்த 24ஆம் தேதி கணவரோடு மருத்துவமனைக்கு சென்று திரும்பினார்.

 

புதுக்கோட்டை அருகே செல்லும் போது மாற்று சமூகத்தை சேர்ந்த பாக்கியராஜ் மோகன்ராஜ் ஆகியோர் அவர் மீது எச்சில் துப்பி காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. நிலைதடுமாறி விழுந்த அவர் புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாக்யராஜ் மோகன்ராஜ் ஆகியோர் மீது வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.


Leave a Reply