அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலி..!

ள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் வேலை பார்க்கும் ஆசிக் என்பவர் வாடகை காரில் சேலம் சென்றுள்ளார்.

 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அடுத்த சின்ன சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து திடீரென எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் சிக்கியதில் ஓட்டுநர் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரங்களில் நூறடி தூரத்தில் சென்று நின்றது. இதனிடையே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Leave a Reply