நாடு முழுவதும் படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம்..!
கொரொனா தொற்று குறைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்திப் குலேரியா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
சரியான கண்காணிப்புடன் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பள்ளி வகுப்புகளில் மாணவர்கள் நேரடியாக கல்வியை கற்பது கல்வியாளர்கள் கண்ணோட்டத்தில் முக்கியமானது என்பதுடன் ஒரு மாணவரின் தனிப்பட்ட குணத்தையும் பழக்கவழக்கத்தை தீர்மானிப்பதாக அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





