கடலில் தவறி விழுந்த பெண்ணை துணிச்சலுடன் மீட்ட புகைப்படக்காரர்..!
மும்பையில் கடலில் தவறி விழுந்த பெண்ணை துணிச்சலுடன் மீட்ட புகைப்படக்காரருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சுற்றுச் சுவரில் அமர்ந்து இருந்த பெண் ஒருவர் கடலில் தவறி விழுந்தார்.
இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் துணிச்சலுடன் கடலில் குதித்த சுற்றுலா புகைப்படக்காரர் ஒருவர் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





