யோகாவில் உலக சாதனை படைத்த மாணவிகள்..!
ரிஷிவந்தியம் அருகே யோகாவில் உலக சாதனை படைத்த மாணவிகளுக்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவரெட்டியார் புரத்தை சேர்ந்தவர் யாஷிகா.
இவர் 40 நிமிடத்தில் 300 விதமான யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்தார். அதேபோன்று தீபிகா என்னும் மாணவி 20 வினாடியில் சந்திரஹாசன் செய்து உலக நோபல் பரிசு பெற்றார்.
இவர்களை பாராட்டிய நடுவர்கள் பதக்கம் மற்றும் வெற்றி சான்றிதழ்களை வழங்கினார். இதுபோன்ற பல்வேறு சாதனைகளை படைத்து தமிழக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






