--- --:--:-- --

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் கேட்கும் போக்குவரத்து காவலர்..!

8

சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டுனர்களிடம் லஞ்சம் கேட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

கோயம்பேட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்ட போது அதை செல்போனில் படம் பிடித்த மற்றொரு ஓட்டுநர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

 

வீடியோவில் இருப்பது கோயம்பேடு போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரராஜன், தலைமை காவலர் சாலமன் ஆகியோர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரிடமும் காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon