--- --:--:-- --

திருவொற்றியூரில் சீமான் போட்டி! நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் அறிமுகம்!!

Nam tamizhar

சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்; திருவொற்றியூர் சீமான் போட்டியிடுகிறார்.

 

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ஒருமாதம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றிரண்டை தவிர மற்றவற்றுடன் தொகுதி உடன்பாடுகளை செய்து கொண்டுள்ளன. மறுபுறம், யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன.

 

இந்த நிலையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, நேற்று தனது வேட்பாளர்களை அறிமுகம் செய்தது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்றிரவு நடந்த பிரசார கூட்டத்தில், 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 117 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் ஆவர்.

 

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார். அறிமுக கூட்டத்தில் பேசிய சீமான், அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர் என்று குற்றம்சாட்டினார். பெண்களுக்கு 50% கொடுப்பது எங்கள் கடமை. ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை என்றார்.

 

மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது. ஆணுக்கு பெண் சமமல்ல. ஆணும், பெண்ணும் சமம். விவசாயி வாழ்ந்தால் நாடு வாழும். விவசாயிகள் செத்தால் அது நாடல்ல சுடுகாடு என்று சீமான் ஆவேசமாக குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon