முகக் கவசம் அணியாவிட்டால் ஊரடங்கு கட்டாயம் அமல்படுத்தப்படும்..!
மும்பை மின்சார புறநகர் ரயில்களில் அதிகாரிகளுடன் திடீரென ஆய்வு நடத்திய மாநகராட்சி மேயர் முக கவசம் அணியாத நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதித்துள்ளார். மும்பையில் மீண்டும் கொரொனா பரவல் வேகமெடுத்து கடந்த ஒருவாரமாக அதிகளவில் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
நேற்று நான்காயிரத்து 700க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். முக கவசம் அணிவது கட்டாயம் கடைபிடிக்காவிட்டால் மீண்டும் ஊரடங்கு வர நேரிடும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





