ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை குறிச்சி குளத்தை மேம்படுத்தி புதுப்பிக்கும் பணி.அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார் !!!
கோவை மாநகர் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை குறிச்சி குளத்தை ரூ.52.16 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி புதுப்பிக்கும் பணியினை பூமி பூஜை செய்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.


இதில் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம்,மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத்,இணை ஆணையர் மதுராந்தகி,பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






