திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுங்குவார் சத்தரத்தை அடுத்த குணகாரம் பாக்கத்தை சேர்ந்த ரேணுகாதேவி என்ற பெண்ணுக்கு 30 வயதான நிலையில் இன்னும் திருமணம் நடைபெறவில்லை.
நேற்றிரவு பெற்றோர் தூங்கிக்கொண்டு இருந்தபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி ரேணுகாதேவி தீ வைத்துக் கொண்டதாகவும் இதனால் உடல் கருகிய நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






