கோவை சிங்காநல்லூர் அருகே,பாழடைந்த கிணற்றில் ஒப்பந்த ஊழியர் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை!

கோவை சிங்காநல்லூர், ரயில்வே கேட் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றில் 24 வயது இளம் மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து, போலீசார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அருண்குமார் என்பதும்,மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. அருண்குமார் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் சண்டை போட்டு வெளியே சென்றுவிட்டதாகவும்,காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

 

மேலும்,இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணைக்கு பின்னரே முழுத்தகவலும் தெரிய வரும்.

 

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கிணற்றில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply