கொரொனா தொற்று பரவலை தடுக்க புகையிலை விற்பனைக்கும், பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநில அரசுகள் இது தொடர்பாக அவசரச் சட்டம் உத்தரவு வெளியிட்டுள்ளனர். அதை சுட்டிக்காட்டி அவர் எழுதியுள்ள கடிதத்தில் புகையிலையை பயன்படுத்துவோர் பொது இடங்களில் எச்சில் துப்புவதால் கொரொனா, டிபி, பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார்.
புகையிலை விற்பனைக்கும் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிப்பதன் மூலம் சுத்தமான இந்தியாவோடு ஒரு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உதவ முடியும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.