இந்தியாவில் லட்சகணக்கான அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போகும்!

கொரொனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்தியாவில் சுமார் ஐந்தரை லட்சம் அறுவை சிகிச்சைகள் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் ஆய்வு ஒன்று நடத்தினார்.

 

இந்த ஆய்வில் உலகம் முழுவதும் கடந்த 12 வாரங்களில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 2 கோடியே 84 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கொரொனா பாதிப்பு அதிகரித்தால் கூடுதலாக 24 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்தாகும் சூழல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply