கர்ப்பிணி மனைவி மற்றும் குழந்தையை தள்ளு வண்டியில் 700 கிமீ அழைத்து சென்ற இளைஞர்!

ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பும் பொருட்டு புலம்பெயர் தொழிலாளி ஒருவர் கர்ப்பமாக உள்ள தனது மனைவி மற்றும் குழந்தையை சிறிய வண்டியில் அமர வைத்து 700 கிலோமீட்டர் அழைத்துச் சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்த ராமு ஊரடங்கு காரணமாக மத்திய பிரதேசத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்கு குடும்பத்துடன் நடந்தே செல்ல பயணப்பட்டார்.

ஆனால் கர்ப்பமாக உள்ள மனைவி மற்றும் குழந்தைகள் நீண்ட தூரம் நடக்க முடியாததால் வழியில் கிடைத்த பொருட்களை வைத்து தற்காலிக தள்ளு வண்டியைத் தயாரித்து அவர்களை அதில் அமர வைத்து மத்திய பிரதேசத்திற்கு சென்றடைந்தனர். அங்கு அவர்களை மீட்ட போலீசார் உணவு கொடுத்து வாகனம் மூலம் சொந்த ஊர் அனுப்பினர்.


Leave a Reply