கொரோனாவை வென்ற காதல்..! சீன பெண்ணை கரம்பிடித்த இந்தியர்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாட்டை சேர்ந்த தனது காதலியை திட்டமிட்டபடி கரம்பிடித்த மத்தியபிரதேச இளைஞர் பாராட்டைப் பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மான்ஸரை சேர்ந்த சத்யார்த் மிஸ்ராவும், சீனாவை சேர்ந்த சிக்காகோவும் கனடாவில் ஒன்றாக படிக்கும் போது காதல் வயப்பட்டனர்.

 

இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சீனாவின் வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடிவு செய்து மணப்பெண்ணும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை வந்து சேர்ந்தனர். ஆனால் கொரோனா அறிகுறி உள்ளதா என மணப்பெண்ணின் பெற்றோரையும் உறவினர்களையும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில் திட்டமிட்டபடி நேற்று இருவருக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. சீனாவிலிருந்து மணப்பெண்ணின் உறவினர்கள் சிலர் வருவதாக இருந்த நிலையில் ,இ-விசா முறை ரத்து, சீன அரசு அனுமதிக்காதது ஆகிய காரணங்களால் அவர்களால் வர இயலவில்லை.


Leave a Reply