ஆமைக்கு செயற்கைக் கால் பொருத்திய ஆய்வாளர்கள்

தாய்லாந்தில் காலை இழந்த ஆமைக்கு விஞ்ஞானிகள் செயற்கை காலை பொருத்தி வாழ்வு அளித்துள்ளனர். மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை ஒன்றுக்கு அதன் காலில் பலத்த காயம் ஏற்பட்டு கால் துண்டிக்கப்பட்டது.

 

இதனால் நீந்த முடியாமல் அந்த ஆமை பரிதவித்து வந்தது. இதனையடுத்து பாங்காக்கில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் இணைந்து ஆமைக்கு சேர்க்கைகளை பொருத்த முடிவு செய்தனர். தொடர்ந்து குறிப்பிட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டது. இதனையடுத்து ஆமை மகிழ்வுடன் நீந்தி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply