பாரம்பரிய முறைப்படி இனிப்பு தயாரித்து சந்தைப்படுத்தும் 93 வயது மூதாட்டி
பஞ்சாப் மாநிலத்தில் 93 வயது மூதாட்டி ஒருவர் பாரம்பரிய முறையில் தயாரித்த இனிப்புகளை விற்பனை செய்து வருகிறார். சண்டிகரை சேர்ந்த ஹர்பஜன் கௌரி என்ற அந்த மூதாட்டி தன் பிள்ளைகளுக்கு சிறுவயதில் பாரம்பரிய முறையில் தயாரித்து தந்த பர்ஃபி, லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை 93 வயதில் சந்தைப்படுத்தியுள்ளார்.
சிறுவயது நினைவுகள் என்று அடைமொழியுடன் விற்பனை செய்து வரும் ஹர்பஜன் கௌரியிடம் பலர் பாரம்பரிய முறையில் இனிப்பு தயாரிப்பதை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




