நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடிகை நமீதா தனது கணவருடன் சுவாமி தரிசனம் செய்தார். நாமக்கல்லில் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தனது கணவருடன் சென்ற நடிகை நமீதா அங்கு சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து கோவிலை சுற்றி வந்து அதன் வரலாற்றையும் நடிகை நமீதா தெரிந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறினார். திரைப்படத்தில் நடிக்க நல்ல கதைக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடிகை நமீதா தனது கணவருடன் சாமி தரிசனம்
