காஷ்மீரில் வீரமரணம் அடைந்த 2 இந்திய வீரர்கள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். ரசோரி மாவட்டம் நவ் சியரா எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.

 

இதனையடுத்து அங்கு சென்ற ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர்.


Leave a Reply