மசாலா பாடல்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது!
சினிமாவில் மசாலா பாடல்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் நல்ல கதைகளுக்கு அளிக்கப்படுவதில்லை என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் ஆலாங்கொம்பு எஸ்எஸ்விஎம் என்ற தனியார் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர் மசாலா பாடல்கள் இல்லாத காரணத்தால் தான் நடித்த இறுதிசுற்று படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் இரண்டு வருடம் தாமதமானதாக தெரிவித்தார். பள்ளி தேர்வுகளில் தோல்வி ஏற்பட்டாலும் மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி பெறலாம் எனவும் மாதவன் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




