--- --:--:-- --

திருவண்ணாமலை அருகே முட்புதரில் விட்டுச்செல்லப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

14

திருவண்ணாமலை அருகே முட்புதரில் விட்டு செல்லப்பட்ட பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் அழுத நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையை மீட்டு அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

 

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் குழந்தையை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அதனை விட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon