திமுகவை கண்டித்து 20-ம் தேதி ஆர்ப்பாட்டம்

திமுகவை கண்டித்து வரும் 20ஆம் தேதி தமிழக பாரதிய ஜனதா சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக சாதி மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி சூழ்ச்சி செய்து ஆட்சி பிடிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இலங்கை தமிழர்களின் விருப்பம் சார்ந்து கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


Leave a Reply