செல்போன் சேவை நிறுவனங்கள் அறிவித்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் மற்றும் வோடோஃபோன், ஐடியா நிறுவனங்கள் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சேவை கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்திருந்தன.
அதைத்தொடர்ந்து இலவச சேவைகளை கொண்டுவந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் சந்தை சூழலுக்கு ஏற்ப கட்டண உயர்வை கொண்டு வருவதாக அறிவித்தது. அதன்படி புதிய கட்டண உயர்வு நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.