கோவையில் ஓடும் ரயிலில் ஏறும்போது தவறி விழ இருந்த பெண் பயணியை பத்திரமாக ரயிலில் ஏற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவையில் இருந்து மங்களூர் செல்லும் கோவை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அப்போது ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு குடும்பம் ரயிலில் அவசரஅவசரமாக ஏறியது.
இதில் கடைசியாக ஏறிய பெண் பயணி தவறி விழ இருந்தார். அப்போது அங்கிருந்த ரயில்வே காவலர் பாலகிருஷ்ணன் சுதாரித்துக்கொண்டு கீழே விழ இருந்த பெண்ணை பத்திரமாக ரயில் பெட்டிக்குள் தள்ளி அவரை காப்பாற்றினார். இந்த காட்சி ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
மேலும் செய்திகள் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை