7 தலைகள் கொண்ட பாம்பின் தோல் உரிந்து கிடப்பதாக தகவல்

பெங்களூரு அருகே ஏழு தலைகள் கொண்ட பாம்பின் தோலுரிந்து கிடப்பதாக வீடியோ வைரலாகும் நிலையில் அப்படி ஒரு பாம்பு இருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கிராமத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு ஏழு தலைகள் கொண்ட பாம்பின் தோல் உரிந்து கிடப்பதாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

கோவில் அருகே காணப்பட்டதால் கதைகள் காவியங்களில் வரும் ஏழுதலை பாம்பாக இது இருக்கலாம் இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதுகுறித்த தகவல் தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியான நிலையில் ஏழு தலை பாம்பின் தோலை காண மக்கள் குவிந்து வருகின்றனர். இருப்பினும் இப்படி ஒரு பாம்பு நிஜத்தில் இருக்க வாய்ப்பில்லை என பாம்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.


Leave a Reply