ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில் இதனை கண்டித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிரணி கலை இலக்கியப் பிரிவு,இளைஞர் காங்கிரசார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply