பாம்பு ஒன்று தன் உடலை தானே விழுங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பென்சில் வேனியாவில் ஊர்வன சரணாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. Forgotten Friend Reptile Sanctuary என்ற பெயரில் இயங்கி வரும் அந்த சரணாலயத்தில் பாம்புகள்,ஆமைகள் என ஊர்வன உயிரினங்கள் பல பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் அங்கு பாதுகாக்கப்படும் பாம்பு ஒன்று தன்னைத்தானே விழுங்கும் அபூர்வ நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது.
இதனைக் கண்ட பாம்பு வல்லுநரான ஜோதக்கர், தன் செல்போன் மூலம் பேஸ்புக் லைவ் செய்துள்ளார்.இந்த அரிய நிகழ்வைக் கண்ட பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோதக்கர், ‘பொதுவாக சில பாம்புகள் பசி வந்தால், மற்ற பாம்புகளை விழுங்கும். சில நேரங்களில் அரிதாக தன்னைத்தானே விழுங்கவும் பாம்புகள் முயற்சிக்கின்றன. அதன் வாலையே வேறு பாம்பு என நினைத்து விழுங்கும். அது தன் உடல்தான் என உணர்ந்ததும் விழுங்குவதை விட்டுவிடும்.

ஆனால் இந்தப் பாம்பு சரணாலயத்தில் சரியாக பராமரிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் ஏன் இப்படி நடந்து கொண்டது எனத் தெரியவில்லை. அது மனதளவில் ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அந்தப் பாம்பு தன்னைத்தானே விழுங்க முயற்சிப்பதும், பின்னர் பாம்பு வல்லுநர் ஜோதக்கர் அதனை விடுவித்து காப்பாற்றுவதும் பதிவாகிள்ளது. அந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களுடைய ஆச்சரியத்தை பதிவு செய்து வருகின்றனர்.






