விஸ்வரூப சுழற்காற்று.மெக்ஸிகோவில் வானுக்கும், பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்த சுழற்காற்று பார்ப்பவர்களை பெரிதும் அச்சுறுத்தியது.
ஸகாடகஸ் மாநிலத்தில் உள்ள ஃப்ரஸ்னிலோ என்ற இடத்தில் கடந்த சில நாட்களாகவே காற்று அதிகபட்ச வேகத்தில் வீசி வந்தது. இந்நிலையில் திடீரென புழுதிப் புயலும், சுழற்காற்றும் அதிவேகமாக வீசத் தொடங்கியது.
அப்போது சுழற்காற்றின் வேகத்தில் தூசு மண்டலம் ஒன்றிணைந்து வானுக்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிச் சுழன்றது.
சிவப்பு மற்றும் அரக்கு நிறத்தில் நின்றாடிய சுழற்காற்றைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
மேலும் செய்திகள் :
காசா அமைதி வாரியம் - அறிவிப்பு
அயோத்தி: 15 கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்ய தடை
பாலி கடற்கரைக்கு 10,000 ஐ.டி.ஆர் கட்டணம்..!
மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கும் சுமார் 100 டன்னுக்கும் அதிகமான தங்கம்..!
20 நாடுகளை குறிவைத்து டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு..!
பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்- டிரம்ப் கண்டனம்






