புத்துணர்வு பெறுமா புதுப்பாளையம்? தண்ணீர், குப்பை பிரச்சனைகளால் தவிப்பு

அவிநாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் வினியோக குளறுபடி, குப்பை பிரச்சனைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்டது புதுப்பாளையம் ஊராட்சி. இதன் கீழ் உள்ள வஞ்சிப்பாளையம் கிணத்துக்காடு, மதுரா நகர் பகுதிகளில் துப்புரவு மேலாண்மை என்பது, பெயரளவுக்கும் கூட நடப்பதில்லை.

 

வீடுகளில் சேகரமாகும் குப்பையை அள்ள தூய்மைக்காவலர்கள் யாரும் வருவதில்லை. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், விரைவில் வருவார்கள் என்ற ஒரே பதிலை கூறுகின்றனர். குடியிருப்புவாசிகள் குப்பைகளை ரோட்டோரங்களில் வீசிச் செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் ஆபத்தும் உள்ளது.

இதேபோல், முறையாக தண்ணீர் வினியோகிப்பதிலும் குளறுபடி இருப்பதாக, அப்பகுதியினர் புலம்புகின்றனர். அவர்கள் கூறுகையில், தண்ணீர் திறந்துவிடும் நபர்கள் வீடுதோறும் வசூல் செய்து தனியாக காசு பார்க்கின்றனர். இருந்தாலும் தண்ணீர் வினியோகிப்பதில் பாரபட்சம் காட்டுகின்றனர்.

 

சில இடங்களில் அதிக நேரம் தண்ணீர் திறந்துவிட்டு வீணாகி செல்வதும், சில பகுதிகளில் முறையாக கூட தண்ணீர் திறந்துவிடுவதும் கிடையாது. குப்பை பிரச்சனை, தண்ணீர் வினியோக குளறுபடிகளுக்கு, அவிநாசி வட்டாட்சியர் தலையிட்டு நல்ல முடிவை காண்பார் என்று நம்புகிறோம். இல்லையெனில், கலெக்டரிடம் முறையிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றனர்.


Leave a Reply