கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து மக்கள் மத்தியில் வெறுப்பை பெற்றவர் வனிதா விஜயகுமார்.இரண்டாவது வாரமே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் தற்போது முதல் முறையாக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியில் பிக் பாஸ் வீட்டில் எல்லாருமே நடிக்கிறார்கள். இரவில் டிவியில் தான் லைட் அணைப்பது போல காட்டுகிறார்கள். ஆனால் மீண்டும் லைட் வந்து விடும்.லைட் வெளிச்சத்தில் அனைவரும் தூங்க வேண்டும் என கூறியுள்ளார். அனைத்தையும் டிவியில் தான் ஒளிபரப்ப முடியாதது, ஹாட் ஸ்டாரினல் பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பதை மொத்தமாக பதிவேற்றலாம் எனவும் கூறியுள்ளார்.
1 வாரத்திற்கு மேல் நடிக்க முடியாது முகத்திரை கிழிந்து விடும் என கமல்ஹாசன் சொன்னது முற்றிலும் பொய்.ஒரு வாரத்திற்கு பிறகு தான் போட்டியாளர்கள் முகத்திரையையே போட்டு கொண்டார்கள் எனவும் கூறியுள்ளார்.