தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தல்

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது வாஜ்பாய் போன்ற மூத்த தலைவர்களை தாம் புறக்கணிப்பதாக கூறப்படும் புகார்களுக்கு பதில் அளித்த மோடி காங்கிரஸ் கட்சியினர் தங்களது சொந்த தலைவர்களை பாராட்டினார்களா என கேள்வி எழுப்பினார்.

 

காங்கிரஸ் கட்சியினர் ஒரு குடும்பத்தை தாண்டி எதையும் யோசித்தது இல்லை என்றும் , மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி போன்றவர்களை கூட காங்கிரஸ் கட்சி புகழ்ந்தது கிடையாது என்றும் மோடி சாடினார். முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டது என கூறி விளக்கமளித்த பிரதமர் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை கைவிட வலியுறுத்தினார். இது பெண்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் மசோதா தான்.

 

இதனை மத ரீதியாக பார்க்க வேண்டியது இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே இருப்பதை அவர் நினைவுபடுத்தினார். இது எமர்ஜன்சி காலம் அல்ல என்பதால் ஜாமீனில் நடமாடுவதை எதிர்கட்சி தலைவர்கள் நன்றாக அனுபவிக்கட்டும் என்று மோடி குறிப்பிட்டார்.

 

அவசர நிலை பிரகடனத்தின் போது நீதிமன்றங்கள் கூட முடக்கபட்டு ஜனநாயகம் சிறையில் தள்ளப்பட்டதாக குற்றம் சாட்டினார். அக்காலம் ஜனநாயகத்தின் மீது தீராத கரை படிந்த காலம் என்றும், பிரதமர் மோடி விமர்சித்தார். வருங்ககாலத்திற்காக தண்ணீரை அனைத்து வழிகளிலும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி எம்‌பிக்கள் நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.

 

ஒவ்வொரு வீட்டிற்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஜல் சக்தி என்ற தனி அமைச்சகம்ஏற்படுத்தபட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தண்ணீரை சிக்கனமாக செலவழித்து பாதுகாக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தண்ணீர் பிரச்சனையால் மிகவும் பாதிக்கப்படுவதே ஏழை மக்கள் தான் என்றும் மோடி கூறினார்.


Leave a Reply