தமிழக மருத்துவமனைகளில் குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புற்று நோய் வலிநிவாரணம் மற்றும் ஆதரவு மையத்தை அவர் தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதன் முறையாக புற்றுநோயை கண்டறியும் அதிநவீன கருவிகள் தமிழகத்தில் 10 இடங்களில் நிறுவப்பட்டுள்ளதாக கூறினார். தமிழக மருத்துவமனைகளில் குடிநீர் பற்றாக்குறை ஏதும் இல்லை எனக்கூறிய அவர் குடிநீர் தேவையை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி அளித்தார்.
மேலும் செய்திகள் :
திருமண நாளில் கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட நடிகை பாவனா..!
சிதம்பரம் அண்ணாமலை பல்.த்தில் ஓய்வூதியம் வழங்கப்படாததை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்!
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மகன் திடீர் மரணம்..!
சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்..!
அடுத்த 2 நாட்களுக்கு மழை..!
விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு






